14,May 2024 (Tue)
  
CH
இலங்கை செய்தி

2, 500 மெட்ரிக்தொன் இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி

இரண்டாயிரத்து 500 மெட்ரிக்தொன் இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உரச் செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவா (Chandana Lokuheva) தெரிவித்துள்ளார்.

நாட்டில் விதிக்கப்பட்டிருந்த சேதன உர இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் மூலம் இந்த தீர்வு எட்டப்பட்டுள்ளதாக சந்தன லொகுஹேவா தெரிவித்துள்ளார்.

பழங்கள் மற்றும் மலர் செய்கைக்கு இரண்டாயிரம் மெட்ரிக்தொன் கலப்பு உரம் தேவை என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகவும், 913 மெட்ரிக்தொன் உரத்தை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்தினால் வழங்கப்படும் சேதன திரவ உரத்தை உரிய முறையில் பயன்படுத்தாமல், அதற்கு பதிலாக உரங்களை பொதுவெளியில் அழிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை உரிய பிரிவுகளுக்கு அறிவிக்கவுள்ளதாக சந்தன லொகுஹேவா தெரிவித்துள்ளார்





2, 500 மெட்ரிக்தொன் இரசாயன உர இறக்குமதிக்கு அனுமதி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு