புத்தாண்டு...
"புத்திகெட்ட மனிதர் எல்லாம்"
படத்துடனும் படக்குழுவினருடனும் பிறந்தது எமக்கு!
பண்டிகைகளும் சரி சினிமாவும் சரி கொண்டாட்டத்துக்குரியவை.
தம் அன்றாட வாழ்க்கையில் இருந்து சற்று நேரம் எஸ்கேப் ஆகி ஒரு மாயா உலகத்தில் வாழ்வதற்கான ஆதங்கம் அனைத்து மனிதர்களினதும் ஆழ்மனத் தேவையாக உள்ளது. அந்த மாயா அனுபவத்தைத் தருவதில் "சினிமா" என்னும் கலை வடிவமே இன்றுவரை முதலிடம் வகிக்கிறது. அதனாற்தான் சினிமா எவராலும் விரும்பப்படும் அதி சக்தி வாய்ந்த கலை வடிவமாக உள்ளது.
அந்த மாயா அனுபவத்தைக் கொடுப்பதில் பெரும் வெற்றி கண்டுள்ளது...
"புத்திகெட்ட மனிதர் எல்லாம்" திரைப்படம்!
நேற்று மட்டக்களப்பு "சுகந்தி" திரையரங்கில் "புத்திகெட்ட மனிதர் எல்லாம்" படம் பார்த்துக் கொண்டிருந்த சினிமா இரசிகர்கள் படத்தின் இடையிடையே கொடுத்த "ரீயாஷ்ன்கள்" கைதட்டல்கள், விசில்கள், இதர சத்தங்கள், நிசப்தங்கள் அதற்குச் சான்று.
"சினிமா அனுபவம்" என்பது வெறுமனே, படத்தை இரசிப்பது மட்டுமல்ல...
சாதி, மதம், இனம், பால்நிலை, படித்தவர், பாமரர் பேதங்களுக்கு இடமற்ற ஒரு பெரும் மண்டபத்தில் (தியேட்டர்) பெரும் கூட்டத்துக்குள் அமர்ந்து அந்தக் கூட்டத்தின் எதிர்வினைகள், ஆத்மாத்த உணர்வுகள், அதிர்வலையுடன் இரண்டறக் கலந்து படத்தை இரசிக்கும் போதே "சினிமா அனுபவம்" முழுமை பெறுகிறது.
அந்த "பேரனுபவத்தை" கொடுப்பதில் இதுவரை தடுமாறிக் கொண்டிருந்த "ஈழம் சினிமா"...
"புத்திகெட்ட மனிதர் எல்லாம்" படத்துடன் எம் மக்களுக்கு புது நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
இன்றும்...வழிகளை தேடு வலிகள் பறக்கும்
மட்டக்களப்பு- சாந்தி
மன்னார் - அயன்
வவுனியா- வசந்தி
திருகோண்மலை- சரஸ்வதி
கொழும்பு - ஈரோஸ்
திரையரங்குகளில் அந்த சினிமா அனுபவத்தைக் கொண்டாடலாம்!
உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 Comments
No Comments Here ..