25,Apr 2024 (Thu)
  
CH
உலக செய்தி

தடுப்பூசி செலுத்தாதவர்கள் வெளிநாடு செல்ல தடை

முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் பூஸ்டர் டோசை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. அங்கு 24 மணி நேரத்தில் 2,500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தடுப்பூசி செலுத்துவதையும் தீவிரப்படுத்தி வருகிறது.

தற்போது புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் பரவி வருவதையடுத்து புதிய கட்டுப்பாடு ஒன்றை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு விதித்துள்ளது. அதன்படி தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத குடி மக்கள் ஜனவரி 10-ந்தேதி முதல் வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய அவசர நெருக்கடி பேரிடர் மேலாண்மை ஆணையம் டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, ‘கொரோனா தடுப்பூசி போடப்படாத ஐக்கிய அரபு எமிரேட்ஸ் குடிமக்கள் பயணம் செய்வதற்கு ஜனவரி 10-ந்தேதி முதல் தடை விதிக்கப்படும்.

முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்கள் பூஸ்டர் டோசை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





தடுப்பூசி செலுத்தாதவர்கள் வெளிநாடு செல்ல தடை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு