17,May 2024 (Fri)
  
CH
இலங்கை செய்தி

இரா.சம்பந்தனிற்கு தேவையான சலுகைகளை வழங்க ஜனாதிபதி, மஹிந்த கூட்டாக உத்தரவு

ரணில் அரசாங்கத்தினால் இரா.சம்பந்தனிற்கு வழங்கப்பட்ட சலுகைகள் எதையும் தற்போதைய அரசு மீளப்பெறாது என சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.


இரா.சம்பந்தனிற்கு மட்டுமல்ல, வீ.ஆனந்தசங்கரிக்கும் அரசாங்கத்தினால் வீடொன்று வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


இன்று (22) நாடாளுமன்ற அமர்வின்போது, பொது முக்கியத்துவம் வாய்ந்த அறிக்கையென குறிப்பிட்டு, தனது சொகுசு பங்களா, பென்ஸ் கார் விவகாரத்தை இரா.சம்பந்தன் எழுப்பினார்.


இதற்கு பதிலளித்த தினேஷ் குணவர்த்தன, முக்கியமான அரசியல் தலைவர்களிற்கு இது போன்ற வசதிகளை அரசு செய்து வருகிறது. இரா.சம்பந்தனிற்கு மட்டுமல்ல, வீ.ஆனந்தசங்கரிக்கும் அரசு வீடொன்றை வழங்கியுள்ளது.


இரா.சம்பந்தினிற்கு வழங்கப்பட்ட எந்த சலுகையும் மீளப்பெறப்பட மாட்டாது. சம்பந்தனிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் அறிவுறுத்தியுள்ளனர் என்றார்.




இரா.சம்பந்தனிற்கு தேவையான சலுகைகளை வழங்க ஜனாதிபதி, மஹிந்த கூட்டாக உத்தரவு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு