19,May 2024 (Sun)
  
CH

உள்ளாடைக்குள் வைத்து கடத்தப்பட்ட பாம்புகள்

அரிய பொருள்கள் விலை மதிப்பில்லா தங்கம், வைரம் போன்ற உலோகங்களை சட்ட விரோதமாக நாடு விட்டு நாடு கடத்துவதை நாம் பார்த்திருப்போம். பொருள்களை போலவே அரிய வகை பாம்பு, ஆமை, குரங்குகள் போன்றவற்றை கடத்தி கோடிக் கணக்கில் மாபியாக்கள் பணம் சம்பாதிக்கின்றனர்.


குறிப்பாக, விமான நிலையம் மற்றும் துறைமுகங்களில் இது போன்ற பொருள்கள் கடத்தும் போது இவர்களை பிடிப்பதற்கு தனியாக சோதனை தொடர்ந்து நடைபெறும். அப்படி ஒரு சோதனையில் பெண் ஒருவர் தனது உள்ளாடைகளில் பாம்புகளை கடத்தி சென்று சிக்கிய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் புக்சியான் துறைமுகம் உள்ளது. அங்கிருந்து ஹாங்காங் செல்லும் கப்பலில் பயணிக்க பெண் ஒருவர் வந்துள்ளார்.

அந்த பெண் சந்தேகத்திற்கு இடமான முறையில் இருந்துள்ளார். அதன் பேரில் துறைமுக அதிகாரிகள் நடத்திய சோதனையில் அந்த பெண் தனது மேல் உள்ளாடையில் 5 பாம்பு குட்டிகளை துணி பைகளில் கட்டி வைத்து காட்டியது கண்டுபிடிக்கப்பட்டது.






உள்ளாடைக்குள் வைத்து கடத்தப்பட்ட பாம்புகள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு