09,May 2024 (Thu)
  
CH
வாழ்வியல்

பூப்படைந்த பெண்களுக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்

பூப்படைந்த பெண்கள் என்னமாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம், அவர்களுக்கு கண்டிப்பாக கொடுக்க வேண்டிய உணவு முறைகள் எவை

பூப்படைந்த குழந்தைகளுக்கு மன ரீதியிலும், உடல் ரீதியிலாகவும் நாம் ஆதரவு கொடுக்க வேண்டும். உடல்ரீதியாக வரக் கூடிய மாற்றங்களை அவர்கள் எப்படி சமாளிக்க வேண்டும். மாதவிலக்கு சுகாதாரம் குறித்தும் அவர்களுக்கு கட்டாயம் சொல்லித் தருதல் வேண்டும். உணவுமுறைகள் இதனை பின்பற்றுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி அவர்களுக்கு விழிப்புணர்களை ஏற்படுத்த வேண்டும்.

பெண் குழந்தை பூப்பெய்தியதும் உடலுக்குத் தேவையான அளவு மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டியவது அவசியம். கறுப்பு உளுந்து - தோல் நீக்காமல் உளுந்தில் வடை, களி, சத்துமாவாக பொடித்தும் சாப்பிடலாம். சத்துமாவு மற்றும் களி தயாரிப்பதற்கு கறுப்பு உளுந்தை நன்றாக வறுத்துப் பொடித்துக் கொள்ள வேண்டும்.


பின் நாட்டுச் சர்க்கரை அல்லது பனை வெல்லம் சேர்த்து சத்துமாவாகச் சாப்பிடலாம். அதே மாவைக் கூழ் போன்று காய்ச்சி, நல்லெண்ணெய், காய்ந்த திராட்சை, முந்திரி மற்றும் பாதாம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடக் கொடுக்கலாம். எலும்புகள் வலுவாகவும், சீரான மாதவிடாய்சுழற்சிக்கும், ஹார்மோன்கள் சீராகச் செயல்படவும் கறுப்பு உளுந்து உதவும்.

நல்லெண்ணெய் - நல்லெண்ணெய்யில் இருந்து கிடைக்கும் கொழுப்பு, நல்ல கொழுப்பு வகையைச் சேர்ந்தது. எனவே, உணவில் அடிக்கடி நல்லெண்ணெய் மற்றும் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். நாட்டு முட்டை - பெண் குழந்தைகள் பூப்பெய்திய உடன் உடலுக்குத் தேவையான கொழுப்புச்சத்தை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தினமும் ஒன்று அல்லது இரண்டு நாட்டு முட்டையை மஞ்சள் கருவுடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட வேண்டும். கம்பு - வறுத்த கம்பு தானியத்தைப் பொடித்து, கூழாகவோ அல்லது களியாகவோ சமைத்து சாப்பிடலாம். எலும்புகள் வலுப்பெற கம்பு உறுதுணை புரியும்.


பொட்டுக் கடலை - பொட்டுக்கடலையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பொடித்து நாட்டுச் சர்க்கரை சேர்த்து சத்துமாவாக சாப்பிடலாம். இதுவும் எலும்பை வலுப்படுத்த உதவும். அசைவ உணவுகள் - மீன், ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் குறைவான அளவு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். கீரை வகைகள் - மாதவிடாய் நாள்களில் ரத்தப்போக்கு ஏற்படுவதால், சிலருக்கு ரத்தச்சோகை வர வாய்ப்பு உள்ளது. இதைத் தடுக்க முருங்கைக் கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பசலைக் கீரை மற்றும் முள்ளங்கி கீரை இவற்றில் ஏதேனும் ஒரு கீரையை வாரத்திற்கு 3 முறை எடுத்துக் கொள்ள வேண்டும். பாகற்காய், சுண்டைக்காய் - சில பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் நாள்களில் ரத்தப்போக்கு சற்று குறைவாக இருக்கும்.

மேலும் உடலில் ரத்தத்தின் அளவும் குறைய நேரிடும். இதற்கு வயிற்றில் இருக்கும் நாக்குப் பூச்சியும் காரணமாக இருக்கலாம். உணவில் பாகற்காய், சுண்டைக்காய் ஆகிய இரண்டையும் அதிக அளவில் சேர்த்துக்கொண்டால் நாக்குப்பூச்சி தொந்தரவு ஏற்படாது.


சத்து மாவு உருண்டை - கேழ்வரகு, கம்பு, நாட்டுச் சோளம், பொட்டுக்கடலை மற்றும் பயத்தம் பருப்பு ஆகியவற்றால் தயாரிக்கப்படும் சத்து மாவு உருண்டையை மாதத்திற்கு 3 நாள்கள் சாப்பிட வேண்டும். மாதவிடாய் நாள்களில் சாப்பிட்டால் அதிக அளவு பலன் பெறலாம்.

கொண்டைக் கடலை - கருப்பு அல்லது வெள்ளைக் கொண்டைக் கடலையை வாரத்திற்கு 2 முறை சேர்த்துக் கொண்டால் கர்ப்பப்பை ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

நாப்கின்- மாதவிடாய் காலத்தில் நாப்கினை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை விட எப்படி அதை அப்புறப்படுத்த வேண்டும் என்பதை நாம் சொல்லி தர வேண்டும். குழந்தைகளின் மாதவிடாய் சுகாதாரத்தை சுத்தமாக வைத்திருப்பதை போல் சுற்றுச்சூழலையும் தூய்மையாக வைத்திருப்பது அவசியமாகும்.

எத்தனை மணி நேரத்திற்கு ஒரு முறை அவர்கள் நாப்கின்களை மாற்ற வேண்டும். பிறப்புறுப்புகளை எப்படி சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதையும், அவர்களுக்கு தாய்மார்கள் சொல்லிக்கொடுக்க வேண்டும். அதுபோல் உடல்ரீதியிலான மாற்றங்களை அவர்களுக்கு சொல்லித் தர வேண்டும். இதெல்லாம் ஒன்று இல்லை.

சாதாரணமான மாற்றங்கள்தான். உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவதை போன்றதுதான் இந்த மாற்றங்கள் என்பதை அவர்களுக்கு சொல்லித்தர வேண்டும். இந்த நேரத்தில் நாம் அவர்களுக்கு கொடுக்கக் கூடிய உணவுகள் அவர்களுக்கு பிற்காலத்தில் உடல்நலனை பராமரிக்க உதவும் வகையில் இருக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு புரியும்படி சொல்லிக்கொடுக்க வேண்டும்.

ஹார்மோன் மாற்றம் இந்த நேரத்தில்தான் ஹார்மோன்கள் சுரக்கப்படுகிறது. அவர்களுக்கு கால்சியம் சத்துகள், இரும்பு சத்துகளை அதிகமாக கொடுக்கும் போது ஈஸ்ட்ரோஜன், புரஜஸ்டிரான் என்ற ஹார்மோன்கள் சீராக வேலை செய்யும். சிகப்பு அரிசியை கொடுக்கலாம்.

இதில் இரும்பு சத்துகள் அதிகமாக இருக்கிறது. விட்டமின்களும் உள்ளன. இதில் நார்சத்துகளும் அதிகமாகவே இருக்கிறது.


சத்துகள் -பூப்படைந்த முதல் 3 நாட்கள்  கொடுக்க வேண்டியது என்னவென்றால் வேப்பங்கொழுந்தும் மஞ்சளும்தான். இந்த இரண்டையும் அரைத்து சிறிய நெல்லிக்காய் அளவுக்கு மூன்று நாள்களும் தர வேண்டும். உடலில் இருக்கக் கூடிய கழிவுகள் வெளியேறவும், தொற்றுகள் ஏற்படாமலும் உடலை சுத்தப்படுத்த இந்த உருண்டை மிகவும் உதவும்.


புரதச்சத்து- இரும்புச் சத்து, கால்சியம் சத்து, புரதச் சத்து ஆகிய மூன்றும் தேவைப்படுகிறது.

இந்த மூன்றையும் நாம் சம அளவில் தர வேண்டும். எள் உருண்டை பூப்படைந்த பெண்களுக்கு கொடுக்கலாம். இதை முதல் இரு தினங்கள் கொடுக்கலாம். ஒரு வேளை ரத்த போக்கு அதிகமாக இருந்தால் அதை நிறுத்திவிடலாம். எள்ளுடன் பனை வெல்லத்தையும் சேர்த்து நாம் தரும்போது இதில் இருக்கக் கூடிய ஜின்க், இரும்புச் சத்து, கால்சியம் ஆகியவை நாம் கொடுத்தால் அதிக ரத்த போக்கை சீர் செய்ய இது உதவுகிறது.

பனை வெல்லத்தை காய்ச்சி வறுத்த எள்ளுடன் உருண்டை செய்து கொடுக்கலாம். ஒரு சில குழந்தைகளுக்கு உடல் உஷ்ணம் அதிகமாகவே இருக்கும். அந்த சமயத்தில் கற்றாழையை நாம் தர வேண்டும். கற்றாழையில் உள்ள ஜெல்லை நன்றாக கழுவிவிட்டு பனை வெல்லத்துடன் சேர்த்து நாம் மோர் போல் அடித்து கொடுக்கலாம். மோருடன் இந்த கற்றாழை ஜெல்லை சேர்த்து கொடுக்கலாம்.


ரத்த போக்கு -இதை கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு உடல் உஷ்ணம் குறைந்து சீரான ரத்த போக்கு ஏற்படும். ஒரு சில குழந்தைகளுக்கு வெள்ளைப்படுதல் இருக்கும்.

இது அதிகரித்தால் சிறுநீர் தொற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு. இதை சரி செய்ய முள்ளங்கி, சுரக்காய், வெள்ளை பூசணி ஆகியவற்றை சாப்பிட வேண்டும். இதன் மூலம் வெள்ளைப்படுதல் இல்லாமல் உடல் உஷ்ணம் குறைந்து சீரான ஹார்மோன் பேலன்சை தக்க வைத்துக் கொள்ள உதவும். இதனை அவர்களுக்கு ஒவ்வாமை இருக்கும் பட்சத்தில் இதனை எடுத்துக்கொள்ளலாம்.




பூப்படைந்த பெண்களுக்கு கொடுக்க வேண்டிய உணவுகள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு