10,May 2025 (Sat)
  
CH

7 மாதத்தில் மட்டும் 79 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் - 52 பேர் பலி

கடந்த 7 மாதங்களில் நாட்டில் இடம்பெற்ற 79 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 52 பேர் பலியானதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.


கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி முதல் நேற்று (08) வரை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 35 பேர் காயமடைந்ததாகவும் ஆனந்த விஜேபால குறிப்பிட்டார்.


இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.


இந்தத் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 62 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையது என தெரிவித்தார்.


துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்பில் 260 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 229 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால கூறினார்.





7 மாதத்தில் மட்டும் 79 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் - 52 பேர் பலி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு