நடப்பாண்டில் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும், நாட்டில் மொத்தமாக 23,744 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகள் குறிப்பிடுகின்றன.
ஒவ்வொரு மாதமும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதை அவதானிக்க முடிகின்றது.
இதற்கமைய மார்ச் மாதத்தில் 3,766 நோயாளர்களும் ஏப்ரல் மாதத்தில் 5,166 நோயாளர்களும் மே மாதத்தில் 6,042 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு, இரத்தினபுரி, கம்பஹா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் டெங்கு நோயினால் அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 13 பேர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவிக்கின்றன.
மழையுடனான காலநிலை நாட்டின் பல பாகங்களில் நிலவுவதால் டெங்கு நோய் பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
0 Comments
No Comments Here ..