தலைமன்னாரில் இருந்து படகு மூலம் இந்தியாவுக்கு சட்டவிரோதமாக தப்பிச்செல்ல முயன்ற மூன்று பேர் தலைமன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் கொழும்புத்துறையைச் சேர்ந்தவர்கள் என்றும், யாழ்ப்பாணம், கோப்பாய், பருத்தித்துறை மற்றும் அச்சுவேலி ஆகிய காவல்துறைப் பிரிவுகளில் நடந்த கொலை, கொள்ளை, வாள்வெட்டு போன்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மூவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியதாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.













0 Comments
No Comments Here ..