24,Jun 2025 (Tue)
  
CH

சாலை விபத்தில் இருவர் பலி: சாரதி கைது

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 98ஆம் கட்டைப் பகுதியில் இன்று (ஜூன் 21) நடந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழந்தனர். கந்தளாயில் தமிழ்த்தினப் போட்டியை முடித்துவிட்டு மூதூரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த மூதூர் கல்வி வலயத்திற்குச் சொந்தமான கெப் வாகனம், திடீரென உள் வீதியில் இருந்து பிரதான வீதிக்கு வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.


இந்த விபத்தில் திருகோணமலை சோபிதகம பகுதியைச் சேர்ந்த 61 வயதான குணரத்ன சந்திரசிறி மற்றும் 98 கல்மெடியாவ முள்ளிப்பொத்தானை பகுதியைச் சேர்ந்த 58 வயதான ஹேரத் சந்திரசேகர ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.


விபத்துடன் தொடர்புடைய கெப் வாகனத்தின் சாரதியான மூதூர்- நொக்ஸ் ரோட் பகுதியைச் சேர்ந்த 58 வயதான ஐயூப் லூத் என்பவரை தம்பலகாமம் பொலிஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.


விபத்துக்குப் பின்னர், வாகனத்தில் பயணித்த அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், வாகனமும் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




சாலை விபத்தில் இருவர் பலி: சாரதி கைது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு