20,Jun 2026 (Sat)
  
CH

பெரும்போக நெற்செய்கையில் எதிர்பார்த்தளவு விளைச்சல் இல்லை - அரிசி இறக்குமதி செய்யவேண்டிய நிலை

இந்த பெரும்போக நெற்செய்கையில் எதிர்பார்த்தளவு விளைச்சல் கிடைக்காததால் எதிர்வரும் காலங்களில் அரிசியை இறக்குமதி செய்வதற்கான நிலை ஏற்படும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் புத்தி மரம்பே தெரிவித்துள்ளார்.


இதன்படி 350,000 மெற்றிக் டன் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்தநிலையில், இந்த விடயம் தொடர்பில் விவசாயம் மற்றும் கால்நடைகள் பிரதியமைச்சர் நாமல் கருணாரத்னவிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது "இதுவரை அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை எனவும் பேராசிரியரின் கூற்று கணிப்பு மாத்திரமே என்றும் அடுத்த சில வாரங்களில் சிறுபோக அறுவடை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும்" அவர் குறிப்பிட்டார்.


இதனிடையே, நாட்டின் சில பகுதிகளில் சிறுபோகத்துக்காக பயிரிடப்பட்ட நெல் செழிப்பாக வளர்ச்சியடையவில்லை என விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளார்.


அரசாங்கத்தினால் சிறுபோக நெற்செய்கைக்காக வழங்கப்பட்ட உரத்தின் தரத்தில் ஏற்பட்ட மாற்றமே இதற்கு காரணம் என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிட தக்கது. 




பெரும்போக நெற்செய்கையில் எதிர்பார்த்தளவு விளைச்சல் இல்லை - அரிசி இறக்குமதி செய்யவேண்டிய நிலை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு