கடவத்தை நகரின் மையத்தில் உள்ள மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றில் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் கட்டிடம் முற்றிலுமாக எரிந்து நாசமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மற்றும் கொழும்பிலிருந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் விரைந்து செயல்பட்டுத் தீயை அணைத்ததுடன், அதை தொடந்து நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் கடவத்தை மற்றும் எல்தெனிய விசேட அதிரடிப்படை முகாம்களின் அதிகாரிகள் சம்பவ இடத்தில் பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர்.
தீ விபத்து காரணமாக கொழும்பு-கண்டி பிரதான வீதியின் கடவத்தை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகனச் சாரதிகளை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
0 Comments
No Comments Here ..