24,Jun 2025 (Tue)
  
CH
சினிமா

போதைப்பொருள் வழக்கில் சிக்கிய தமிழ் சினிமா நட்சத்திரங்கள்: ஸ்ரீகாந்த் கைது

சினிமா பிரபலங்கள் போதைப்பொருள் வழக்குகளில் சிக்குவது புதிதல்ல. பாலிவுட், டோலிவுட், கன்னடம் என பல திரைப்படத் துறைகளிலும் இதற்கு முன்பு பிரபலங்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது தமிழ் திரையுலகில் சில நட்சத்திரங்கள் போதைப்பொருள் வழக்குகளில் சிக்கியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சமீபத்தில் மதுபான விடுதி ஒன்றில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நடிகர் ஸ்ரீகாந்த் அவரிடம் இருந்து போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தினாரா என போலிஸார் சந்தேகித்தனர். இதைத் தொடர்ந்து ஸ்ரீகாந்த்துக்கு ரத்தப் பரிசோதனை செய்யப்பட்டது. அந்தப் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதையடுத்து, போலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.


இதேபோல், 'கழுகு' திரைப்படம் மூலம் பிரபலமான நடிகர் கிருஷ்ணாவிடமும் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தியவர்களிடம் தொடர் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.


இந்த விவகாரம் தமிழ் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




போதைப்பொருள் வழக்கில் சிக்கிய தமிழ் சினிமா நட்சத்திரங்கள்: ஸ்ரீகாந்த் கைது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு