29,Jun 2025 (Sun)
  
CH

புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கையை சிக்கவைக்கும் முயற்சி - விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கை அரசாங்கத்தைச் சிக்கவைக்கும் நோக்கிலேயே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வந்திருந்தார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.


இலங்கை தொடர்பாக தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்கு முன்னரே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்கள் இங்கு வந்திருப்பதாகவும், தம்மால் எடுக்கப்படும் முடிவுகள் சரியானவை என்பதைக் காண்பித்துக்கொள்வதே இதன் நோக்கம் என்றும் வீரவன்ச கூறினார். தாம் இலங்கைக்குச் சென்று பல தரப்பினரைச் சந்தித்து கலந்துரையாடியதாகக் கூறிக்கொள்வதே அவர்களின் எண்ணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


இதற்கு முன்னரும் இதேபோன்று நவநீதம் பிள்ளை, அல்உசைன் ஆகியோரும் வந்து சென்றதாகவும், அப்போது அனைத்து தரப்பினரையும் சந்தித்ததாகக் கூறினாலும், பிரிவினைவாதிகளையும் அடிப்படைவாதிகளையுமே சந்தித்ததாகவும், அவர்களை திருப்திப்படுத்தும் விதத்திலேயே அறிக்கைகளும் வெளிவந்ததாகவும் வீரவன்ச சுட்டிக்காட்டினார்.


தற்போதைய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும் அதே வழியில்தான் வந்துள்ளார் எனக் குறிப்பிட்ட வீரவன்ச, அவர் யாழ்ப்பாணத்திற்குச் சென்று உயிரிழந்தவர்களையும் நினைவுகூர்ந்ததை கேள்விக்குட்படுத்தினார். "வடக்கில் உள்ளவர்கள் மட்டுமா இறந்தனர்? புலிகளால் மக்கள் கொல்லப்படவில்லையா? வடக்கில் படையினரின் உடல்கள் இல்லையா? கொல்லப்பட்ட பொலிஸாரின் உடல்கள் இல்லையா?" என அவர் கேள்வி எழுப்பினார்.


செம்மணிக்கு சென்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அஞ்சலி செலுத்தி, ஆன்மீக நிகழ்விலும் பங்கேற்றதாகவும் வீரவன்ச கூறினார்.


பாதுகாப்புத் தரப்பில் இருந்த முன்னாள் அதிகாரிகள் மற்றும் சில சட்டத்தரணிகள் குழுவினர் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரைச் சந்திப்பதற்கு அனுமதி கோரியிருந்தும் அது மறுக்கப்பட்டதாகவும், தேசியவாத அமைப்புகளுக்கும் இடமளிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். மாறாக, விடுதலை புலிகளின் சித்தாந்தத்துடன் இன்றும் செயற்படும் நபர்களுடன் மட்டுமே சந்திப்பு நடந்துள்ளது என வீரவன்ச குற்றஞ்சாட்டினார்.


அத்துடன் விடுதலை புலி ஆதரவாளர்களின் தேவைக்கேற்ப தயாரிக்கப்பட்டுள்ள அறிக்கைக்கு இலங்கையைச் சிக்க வைக்கும் நோக்கிலேயே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வந்துள்ளார் என்று விமல் வீரவன்ச தனது கருத்தை வலியுறுத்தினார்.




புலிகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கையை சிக்கவைக்கும் முயற்சி - விமல் வீரவன்ச குற்றச்சாட்டு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு