போர்க்குற்றங்கள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான விசாரணைகளுக்காக அமெரிக்கா வழங்கும் நிதியுதவியை நிறுத்துமாறு வெள்ளை மாளிகை பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்த தகவலை ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், அரசு ஆவணங்களை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ளது.
இதன்படி, போர்க்குற்ற விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறல் பணிகளை மேற்கொள்ளும் 24 திட்டங்களுக்கான நிதியை நிறுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வெள்ளை மாளிகையில் உள்ள முகாமைத்துவம் மற்றும் வரவு செலவு அலுவலகம் இந்த பரிந்துரையை வழங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரொய்ட்டர்ஸ் தகவல்களின்படி, இந்த பரிந்துரைப் பட்டியலில் இலங்கை, ஈராக், நேபாளம், பெலாரஸ், ஆப்கானிஸ்தான், ரஷ்யா, சிரியா, மற்றும் கொலம்பியா போன்ற நாடுகள் அடங்குகின்றன.
எனினும், அமெரிக்க வெளியுறவுத் துறையும், வெள்ளை மாளிகையின் முகாமைத்துவம் மற்றும் வரவு செலவு அலுவலகமும் இது தொடர்பாக எந்தப் பதிலையும் வழங்கவில்லை என ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த திட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இறுதித் தீர்மானமாக இதனை கருத முடியாது எனவும், இந்த விடயம் தொடர்பில் வெளியுறவுத்துறைக்கு மேன்முறையீடு செய்வதற்கான சந்தர்ப்பம் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Comments
No Comments Here ..