29,Jun 2025 (Sun)
  
CH

முன்னாள் கிழக்கு முதல்வர் பிள்ளையானை விடுதலை செய்யக் கோரி கையெழுத்து வேட்டை

மட்டக்களப்பு - வாழைச்சேனை, பேத்தாழை பகுதியில், பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை விடுதலை செய்யக் கோரி கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது.


கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் ரவிந்திரநாத்தின் கடத்தல் தொடர்பாக சந்தேகத்தின் பேரில், கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் பிள்ளையான் கைதுசெய்யப்பட்டார்.


இந்த நிலையில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிடியிலிருந்து சிவனேசதுரை சந்திரகாந்தனை விடுவித்து, அவருக்கு எதிரான விசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் எனவும் கையெழுத்து வேட்டையில் கலந்துகொண்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதன்போது, ஜனாதிபதிக்கு அனுப்பும் வகையில் கடிதமொன்றும் அங்கு வாசிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.




முன்னாள் கிழக்கு முதல்வர் பிள்ளையானை விடுதலை செய்யக் கோரி கையெழுத்து வேட்டை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு