29,Jun 2025 (Sun)
  
CH

தங்காலை மீன்பிடி படகு விபத்து: இரு மீனவர்கள் மாயம்

தங்காலை பரவி வெல்ல மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றிருந்த ஒரு நெடுநாள் படகு, மீண்டும் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.


விபத்து நடந்த நேரத்தில் மீன்பிடி படகில் 6 மீனவர்கள் இருந்துள்ளனர். அவர்களில் நான்கு பேர் உயிர் பிழைத்துள்ளனர், மேலும் இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


உயிர் பிழைத்த மீனவர்கள் தற்போது தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். படகு ஒரு பாறையில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




தங்காலை மீன்பிடி படகு விபத்து: இரு மீனவர்கள் மாயம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு