29,Jun 2025 (Sun)
  
CH

நாளை விசேட பாராளுமன்ற அமர்வு: நிதி அறிக்கை சமர்ப்பிக்கிறது அரசு

நாளை, ஜூன் 30 ஆம் திகதி, இலங்கை பாராளுமன்றம் ஒரு விசேட அமர்வுக்காகக் கூடவுள்ளது. சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் காலை 9:30 மணிக்கு அமர்வு தொடங்கும்.


2024 ஆம் ஆண்டு 44 ஆம் இலக்க பொது நிதி முகாமைத்துவச் சட்டத்தின் 11 ஆவது பிரிவின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30 அல்லது அதற்கு முன்னர் அரசாங்கம் தனது நிதி உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிட வேண்டும். இந்தச் சட்டத் தேவையை நிறைவேற்றுவதற்காகவே பாராளுமன்றம் நாளை கூடவுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.


பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகள் 16 இன் படி, பிரதமரின் கோரிக்கைக்கு அமைய சபாநாயகரால் இந்த விசேட அமர்வு கூட்டப்பட்டுள்ளது. நாளை மாலை 4:30 மணி வரை அரசாங்கத்தின் ஒத்திவைப்பு விவாதம் நடைபெறும்.


மேலும், பாராளுமன்றம் மீண்டும் ஜூலை மாதம் 8, 9 மற்றும் 11 ஆம் திகதிகளில் கூடும் என பாராளுமன்ற பொதுச் செயலாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.





நாளை விசேட பாராளுமன்ற அமர்வு: நிதி அறிக்கை சமர்ப்பிக்கிறது அரசு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு