களுத்துறை வடக்கு, பொன்சேகா வீதியில் களுத்துறை மாவட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுவந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட 39 வயதுடைய சந்தேகநபரிடமிருந்து 110 கிராம் 17 மில்லிகிராம் ஹெராயின், 101 கிராம் 47 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாகச் சந்தேகிக்கப்படும் 750,000 ரூபா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
பொலிஸ் விசாரணைகளின் படி, இந்தக் குற்றவாளிக்கு எதிராக களுத்துறை மேல் நீதிமன்றம் மற்றும் களுத்துறை நீதவான் நீதிமன்றம் ஆகிய இரண்டிலும் இரண்டு வழக்குகளுக்காகத் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
சந்தேகநபரிடம் களுத்துறை மாவட்ட குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.













0 Comments
No Comments Here ..