29,Jun 2025 (Sun)
  
CH
WORLDNEWS

சென்னையில் இருந்து பாங்கொக் செல்லும் தாய் ஏர்வேஸ் விமானம் ரத்து: பெரும் விபத்து தவிர்ப்பு

சென்னை விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்தின் பாங்கொக் நோக்கி 146 பயணிகளுடன் புறப்படவிருந்த தாய் ஏர்வேஸ் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


விமானம் புறப்படத் தயாராக இருந்த நிலையில், விமானி இந்த தொழில்நுட்ப கோளாறைக் கண்டறிந்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இந்த விமானம் இன்று இரவு அல்லது நாளை காலை தாய்லாந்திற்குப் புறப்படும் என தாய் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.





சென்னையில் இருந்து பாங்கொக் செல்லும் தாய் ஏர்வேஸ் விமானம் ரத்து: பெரும் விபத்து தவிர்ப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு