இன்று (ஜூலை 3) பிற்பகல் நீர்கொழும்பு, துன்கல்பிட்டிய பகுதியில், காவல்துறையின் வீதித் தடையை மீறிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்தச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்தவர் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்று காலை கந்தானை காவல் நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்ற மற்றொரு துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் காரில் இருந்த ஒருவரை இலக்குவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக காவல்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு சம்பவங்கள் குறித்தும் காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
0 Comments
No Comments Here ..