கொழும்பில் உள்ள உயர் நீதிமன்றம், பல்கலைக் கழகங்களில் பகிடிவதையைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை கண்டிப்பாகச் செயல்படுத்துமாறு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு (UGC) இன்று (ஜூலை 9, 2025) உத்தரவிட்டுள்ளது.
இந்த வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தத் தேவையான நிதி, தொழில்நுட்ப ஆதரவு மற்றும் வசதிகளை வழங்குமாறு கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சுக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2020 ஆம் ஆண்டில் பகிடிவதை காரணமாக உடல் மற்றும் மூளையில் காயமடைந்த முதலாம் ஆண்டு மாணவரான பசிந்து ஹிருஷான் டி சில்வா தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதியரசர்களான ஷிரான் குணரத்ன, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சோபித ராஜகருணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இந்த உத்தரவுகளைச் செயல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து விசாரிக்க ஜனவரி 14, 2026 அன்று வழக்கை மீண்டும் அழைக்குமாறு உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.
0 Comments
No Comments Here ..