கல்வி கற்க வயது ஒரு தடை இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், இந்தியாவில் வியக்கத்தக்க சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 60 வயதைக் கடந்த மூத்த குடிமக்கள் மூவர், தமிழகத்தில் மருத்துவக் கல்வியைப் பயில்வதற்கு விண்ணப்பித்துள்ளனர்.
நடப்பாண்டில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, இரண்டு சட்டத்தரணிகள் உட்பட இந்த மூத்த குடிமக்கள், மருத்துவக் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்துள்ளனர். இது எந்தவொரு முயற்சிக்கும் வயது ஒரு தடையல்ல என்பதை வலுவாக எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.
0 Comments
No Comments Here ..