அமெரிக்காவால் ஆகஸ்ட் 1, 2025 முதல் அமுலுக்கு வரும் 30% வரி விதிப்பால் ஏற்படும் வருவாய் இழப்பைச் சமாளிப்பது குறித்து இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.
அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு காரணமாக, சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கை நிர்ணயித்த வரி வருவாய் இலக்குகளை அடைய முடியாமல் போகலாம் என இலங்கை திறைசேரி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, இந்தச் சூழ்நிலையின் விளைவுகள் குறித்து IMF உடன் கலந்துரையாட வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கையிலிருந்து ஏற்றுமதியாகும் ஆடைகளில் சுமார் 40% அமெரிக்க சந்தைக்குச் செல்கின்றன. இந்த புதிய வரி விதிப்பு இலங்கையின் ஆடைத் துறையைப் பெருமளவில் பாதிக்கும் என்பதால், ஆடைத் துறைக்குச் சலுகைகளைப் பெறுவது குறித்து அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை திறைசேரி அதிகாரிகள் உத்தேசித்துள்ளனர்.













0 Comments
No Comments Here ..