இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் மகள் வழிப் பேரன் பீட்டர் பிலிப்ஸ் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார்.
ராணி எலிசபெத்தின் மகள் வழிப் பேரன் பீட்டர்பிலிப்ஸ் (42). இவர் இளவரசி ஆன்னியின் மகன் ஆவார்.
இவரும், கனடாவை சேர்ந்த ஆடம்கெல்லி (41). என்பவரும் காதலித்து கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சவன்னா (9) மற்றும் இஸ்லா(7) என 2 மகள்கள்உள்ளனர்.
இந்த நிலையில் பீட்டர் பிலிப்ஸ்- ஆடம் கெல்லி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனவே இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்தனர்.
அது குறித்து ராணி எலிசபெத் மற்றும்அரச குடும்பத்தினருக்கு தெரிய வந்தது.
இதனால் வருத்தம் அடைந்த அவர்கள் இருவரையும் அழைத்து பேசி சமரசம் செய்ய முயன்றனர். ஆனால் பிரிவதில் அவர்கள் 2 பேரும் உறுதியாக இருந்தனர்.
எனவே,இருவரும் விவாகரத்து செய்ய ராணி எலிசபெத் சம்மதம் அளித்தார்.
எனவே இவர்கள் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளனர். இதன் மூலம் இவர்களின் 11 ஆண்டு கால திருமண வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. விவாகரத்துக்கு பிறகு நண்பர்களாக இருப்போம் என்றும், தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோராக தொடர்ந்து நீடிக்க போவதாகவும் தெரிவித்துள்ளனர். விவாகரத்துக்கு பிறகு ஆடம் கெல்லி கனடா திரும்ப இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீட்டர் பிலிப்ஸ் ராணி எலிசபெத்தின் முதல்பேரன் என்பது குறிப்பிடத்தக்கது
0 Comments
No Comments Here ..