12,May 2024 (Sun)
  
CH
சினிமா

காஞ்சி மடத்துக்கு பூர்வீக வீட்டை தானமாக வழங்கிய எஸ்.பி.பி

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், நெல்லூரில் இருக்கும் தனது பரம்பரை வீட்டை, காஞ்சி மடத்துக்கு தானமாக வழங்கினார்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் ஆந்திராவை சேர்ந்தவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட இந்தியாவின் பல மொழிகளிலும், சுமார், 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியவர். ஆந்திராவிலுள்ள நெல்லூரில், எஸ்.பி.பி.,க்கு பரம்பரை வீடு ஒன்று உள்ளது. அவர் தற்போது சென்னையில் உள்ள வீட்டில் குடியிருக்கிறார். இதனையடுத்து அவரது பூர்வீக வீட்டை காஞ்சி மடத்துக்கு தானமாக அளிக்க உள்ளதாக அவர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், காஞ்சி மடாதிபதி, ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் தனது வீட்டை, எஸ்.பி.பி., முறைப்படி ஒப்படைத்தார். அந்நிகழ்ச்சியில், காஞ்சி மடாதிபதி முன் அவர் ஆன்மீக பாடல் ஒன்றையும் பாடினார்.




காஞ்சி மடத்துக்கு பூர்வீக வீட்டை தானமாக வழங்கிய எஸ்.பி.பி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு