ஹாமில்டனில் 7வயது சிறுவன் மீது துப்பாக்கி சூடு நடத்தி பலத்த காயங்களுக்கு உள்ளாக்கிய துப்பாக்கிதாரியை கைதுசெய்ய, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
20 வயதான ஜெய்டன் பிட்டர் என்பவரே, இவ்வாறு தேடப்படும் நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் மிக ஆபாத்தானவர் என தெரிவித்துள்ள பொலிஸார், இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் தம்மை உடனடியாக தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
கடந்த ஜனவரி 23ஆம் திகதி இரவு கார்டன் வீதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வெளியே இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது.
இலக்கு வைக்கப்பட்ட சம்பவத்தில் சிறுவன் ஒரு திட்டமிடப்படாத இலக்கு எனவும், பிரதான மாடியில் உள்ள ஜன்னல் வழியாக நின்றுக் கொண்டிருந்த போது, இச்சிறுவன் தாக்கப்பட்டதாகவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
0 Comments
No Comments Here ..