மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், மக்கள் நீதி மய்யம் கட்சி மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், கட்சி ஆரம்பித்தபோது இருந்த அதே எழுச்சியோடும், வேகத்தோடும் இன்றும் களம் காண்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கட்சி ஆரம்பித்தபோது, தயங்காமல் தன்னுடன் கைகோர்த்து, நின்ற நிர்வாகிகள், கள வீரர்கள் அனைவருக்கும் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார். ஓய்வுக்கு மட்டுமல்ல, யோசிக்கவும் நேரமில்லை என்று கூறியுள்ள அவர், அடுத்து வரும் நாட்களெல்லாம் செயல் மட்டுமே என்றும் அறிவுறுத்தியுள்ளார். 2021-ல் வென்று தொடங்குவோம் என்றும் அறிக்கையில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
0 Comments
No Comments Here ..