17,Mar 2026 (Tue)
  
CH
சினிமா

நான் வந்தால் ரசிகர்கள் கூடிவிடுவார்கள், ரஜினி வைத்த வேண்டுகோள்

2018ல் தூத்துக்குடியில் ஒரு காப்பர் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் துப்பாக்கிசூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்த சம்பவத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த் "எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் நாடே சுடுகாடாகிவிடும்" என்று கூறினார். மேலும் இந்த சம்பவத்திற்கு சமூக விரோதிகள் ஊடுருவியதே காரணம் என தெரிவித்திருந்தார்.

துப்பாக்கிசூடு பற்றி தற்போது விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறார். அவர் முன்பு வந்து விளக்கம் அளிக்க ரஜினிகாந்திற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் நான் நேரில் ஆஜரானால் ரசிகர்கள் கூடிவிடுவார்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என கூறி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டுள்ளார் ரஜினிகாந்த். மேலும் பதில்களை எழுத்து வடிவமாக சமர்ப்பிக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார் ரஜினிகாந்த்.




நான் வந்தால் ரசிகர்கள் கூடிவிடுவார்கள், ரஜினி வைத்த வேண்டுகோள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு