09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

கருணைக் கொலை தொடர்பான சட்டமூலத்திற்கு போர்த்துக்கல் நாடாளுமன்றம் அனுமதி

கருணைக் கொலை தொடர்பான சட்டமூலத்திற்கு போர்த்துக்கல் நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

போர்த்துக்கலில் ஆளும் சோசலிசக் கட்சி உட்பட 5 அரசியல் கட்சிகளினால் கருணைக்கொலை குறித்த சட்டமூலம் முன்மொழியப்பட்டுள்ளது.

230 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 127 உறுப்பினர்கள் குறித்த சட்டமுலத்திற்கு ஆதரவாகவும் ,124 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்த நிலையில், சட்டமூலம் 3 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2 வருடங்களுக்கு முன்னர் நிராகரிக்கப்பட்ட குறித்த சட்டமூலம் நிலுவையிலிருந்த நிலையில் தற்போது அங்கீகாரமம் வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே குறித்த சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கருணைக் கொலைக்கு சுவிட்சர்லாந்து, நெதர்லாந்து, லக்ஸம்பேர்க் மற்றும் பெல்ஜியத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.





கருணைக் கொலை தொடர்பான சட்டமூலத்திற்கு போர்த்துக்கல் நாடாளுமன்றம் அனுமதி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு