13,May 2024 (Mon)
  
CH
இந்திய செய்தி

லைகா நிறுவனத்திற்கு நடிகர் கமல் ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை அடுத்த பூந்தமல்லி ஈவிபி பிலிம் சிட்டியில் கடந்த 19 ஆம் தேதி இரவு இந்தியன் 2 படபிடிப்பு தளத்தில் ராட்சச கிரேன் விழுந்து 3 பேர் பலியாகினர் 9 பேருக்கு காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் நடிகர் கமல் மற்றும் இயக்குனர் ஷங்கர் நூலிலையில் உயிர் தப்பினர். இந்த விபத்து தமிழ் சினிமா உலகில் மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக நடிகர் கமல் மற்றும் தயாரிப்பு நிறுவனம் லைகா இறந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களுக்கு நிதி அறிவித்திருந்தது. 

இந்த நிலையில் நடிகர் கமல் லைகா நிறுவனத்தின் நிறுவனர் சுபாஸ் கரனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் படபிடிப்பு தளங்களில் பணியாற்றும் சினிமா ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் அவர்களுக்கு காப்பீடு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அந்த கடிதத்தில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். படபிடிப்பு தளங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஏதாவது இழப்பு ஏற்பட்டால் அதை அந்த நிறுவனம் பார்த்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். திரைப்படங்கள் எடுக்கப்படுவதற்கு முன்பாக திரைப்படம் எடுக்கும் இடம் பாதுகாப்பு வசதிகள் அங்கு எப்படி உள்ளது என்பதை முன்கூட்டியே ஆய்வு செய்ய நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என நடிகர் கமலஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்




லைகா நிறுவனத்திற்கு நடிகர் கமல் ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு