பெண்களுக்கான 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சண்டிகர் - அருணாச்சல பிரதேசம் அணிகள் கடப்பாவில் நடைபெற்ற ஆட்டத்தில் மோதின.
முதலில் பேட்டிங் செய்த சண்டிகர் 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்தது. பின்னர் 187 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அருணாச்சல பிரதேசம் அணி களம் இறங்கியது. சண்டிகர் அணியின் காஷ்வீ கவுதம் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அருணாச்சல பிரதேசம் 25 ரன்னில் சுருண்டது.
இதில் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்த காஷ்வீ கவுதம் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனைப் படைத்தார். ஆட்டத்தின் முதல் ஓவரை காஷ்வீ வீசினார். இந்த ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார். அடுத்த ஓவரில் மூன்று விக்கெட்டுகளையும், அதற்கு அடுத்த ஓவரில் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
இதனால் அருணாச்சல பிரதேசம் 10 ரன்களை எட்டுவதற்குள் ஏழு விக்கெட்டுக்களை இழந்தது. அடுத்த ஓவரில் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆல்அவுட் ஆக்கினார். அருணாச்சல பிரதேசம் அணி 9 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்தது. 8 வீராங்கனைகள் டக்அவுட் ஆனார்கள். அதில் நான் பேர் முதல் பந்திலேயே வெளியேறினர்.
0 Comments
No Comments Here ..