புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளைத் தாங்கிய ஏவுகணை யொன்றை இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ நாளை விண்ணுக்கு செலுத்தவுள்ளது.
GSLV - F10 என்ற ஏவுகனையொன்றே இவ்வாறு விண்ணுக்கு செலுத்தப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவு தளத்திலிருந்து, மாலை 5.43 இற்கு இந்த ஏவுகனை விண்ணில் செலுத்தப்படவுள்ளது.
புவியை சுற்றிவரவுள்ள குறித்து ஏவுகனை மூலம், இயற்கைப் பேரிடா், வேளாண், வனப் பாதுகாப்பு உள்ளிட்ட தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது
0 Comments
No Comments Here ..