29,Apr 2024 (Mon)
  
CH
உலக செய்தி

ஈரானில் 4 ஆயிரம் சிறைக்கைதிகள் தற்காலிகமாக விடுவிப்பு!

ஈரானில் கொரோனா வைரஸின் அச்சம் காரணமாக, 54 ஆயிரம் சிறைக்கைதிகள் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிறைக் கைதி ஒருவர் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளமை மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அந்த நாட்டு நீதித் துறை ஊடகப் பேச்சாளர் குலாம் ஹுசைன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்

எனினும், ஐந்து வருடங்களுக்கு மேலதிகமாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் விடுவிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக, ஈரானில் இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளதோடு, இரண்டாயிரத்து 336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், அவர்களில் 435 பேர் முழுமையாக குணமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன

இதேவேளை, கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக, சர்வதேச ரீதியில் இதுவரை மூவாயிரத்து 203 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது




ஈரானில் 4 ஆயிரம் சிறைக்கைதிகள் தற்காலிகமாக விடுவிப்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு