சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வலை பயிற்சியின்போது தொடர்ந்து 5 சிக்சர்கள் அடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார் கூல் கேப்டன் என்று அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி.
13வது ஐ.பி.எல். தொடர் வருகின்ற 29ம் தேதி தொடங்க இருக்கிறது. அதற்கான பயிற்சிகளை கிரிக்கெட் வீரர்கள் தொடங்கியுள்ளனர். மேலும் 2019ம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்த பிறகு இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட மகேந்திர சிங் தோனி இன்றுவரை இந்திய அணியில் இடம்பிடிக்கவில்லை.
இந்நிலையில் உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்ட மகேந்திர சிங் தோனியின் ஆட்டத்தைக் காண அவரது ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். மார்ச் 29ம் தேதி தொடங்க இருக்கும் ஐ.பி.எல். போட்டியில் பங்குபெற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சென்னைக்கு வரத்தொடங்கியுள்ளனர். முக்கிய வீரர்களான தோனி, சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட சில வீரர்கள் சென்னைக்கு ஏற்கெனவே வந்து வலை பயிற்சியை தொடங்கிவிட்டனர்.
0 Comments
No Comments Here ..