02,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

தென்கொரியா பாராளுமன்ற தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி தலைமையிலான கட்சி வெற்றி

தென்கொரியா பாராளுமன்ற தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி மூன் ஜே இன் தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தென்கொரியாவில் புதிய பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான பொது தேர்தல் நேற்று அமைதியாக நடந்தது.

ஏராளமானோர், முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து ஓட்டு போட்டனர்.

ஒவ்வொரு வரும், வெப்பமானி சோதனைக்கு பிறகே, ஓட்டுச் சாவடிக்குள் அனுமதிக்கப் பட்டனர். அதன்பின், கை துாய்மைக்கான கிருமி நாசினி, ´ஜெல்´ அவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து, ஒரு முறை பயன்படுத்தும், கையுறை அளிக்கப்பட்டது. அதை அணிந்து, விருப்பமான வேட்பாளர்களின் சின்னத்திற்கு மக்கள் வாக்களித்தனர்.

சுயமாக தனிமையில் உள்ளோருக்கு, இதர வாக்காளர்களுக்கான ஓட்டு போடும் நேரம் முடிந்ததும், வாக்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டது.




தென்கொரியா பாராளுமன்ற தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி தலைமையிலான கட்சி வெற்றி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு