22,Jun 2026 (Mon)
  
CH
இலங்கை செய்தி

சிறைச்சாலைகளில் PCR பரிசோதனைகள் அதிகரிக்கப்படும்

சகல சிறைச்சாலைகளிலும் பிசீஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளதாக அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தலைமையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் இது தொடர்பான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

சிறு குற்றங்களுக்காக சிறைவாசம் அனுபவிக்கும் கைதிகளில் விடுதலை செய்யப்படக்கூடிய கைதிகளுக்கு பீசீஆர் பரிசோதனைகளை மேற்கொண்டு, தனிமைப்படுத்தலின் பின்னர் அவர்களை சமூகப்படுத்த வேண்டும். எனவும் தீர்மானிக்கப்பட்டது.

சிறைச்சாலைகளில் உள்ள கொவிட்-19 தொற்றாளர்கள் அனைவரையும் ஒரு சிறைச்சாலைக்கு மாற்றி சுகாதார வசதிகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.




சிறைச்சாலைகளில் PCR பரிசோதனைகள் அதிகரிக்கப்படும்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு