12,May 2024 (Sun)
  
CH
இந்திய செய்தி

5 ஆண்டுகளில் 1 லட்சம் பேர் வாழும் பகுதியாக கைலாசா மாறும்- நித்யானந்தா

நித்யானந்தா வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் கைலாசா நாடு அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 1 லட்சம் பேர் வாழும் பகுதியாக மாறும் என தெரிவித்துள்ளார்.

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள நிதயானந்தா தனக்கென கைலாசா என்ற தீவை உருவாக்கியுள்ளதாக கூறி வந்தார்.

இந்த நிலையில் நித்யானந்தா புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அடுத்த 5-ஆண்டுகளில் கைலாசா 1 லட்சம் மக்கள் வாழும் பகுதியாக கட்டமைக்கப்படும் என கூறியுள்ளார்.

மேலும், கைலாசாவில் குமரி கண்டம் இருந்த போது இருந்த அரசியல், அறிவியில், புவியியல், வரலாறு, எல்லாம் எவ்வாறு இருந்ததோ அவ்வாறு கைலாசாவை புனரமைப்பதே தனது நோக்கம் என தெரிவித்துள்ளார்.

மேலும், குமரி கண்டத்தின் மறுமலர்ச்சியே கைலாசம் எனவும், பரமசிவன் நேரில் வந்து உருவாக்கிய வாழ்க்கை முறை தான் குமரி கண்ட வாழ்க்கை முறை என்றும் கூறியுள்ளார்.




5 ஆண்டுகளில் 1 லட்சம் பேர் வாழும் பகுதியாக கைலாசா மாறும்- நித்யானந்தா

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு