தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் தற்போது மக்கள் நீதி மையம் என்ற கட்சியின் மூலமாக தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கமல்ஹாசன் மாவட்டம் மாவட்டமாக சென்று பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வருகிறார். மேலும் இவர் தன்னுடைய தேர்தல் அறிக்கையாக இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கப்படும் என தெரிவித்தார். கமல்ஹாசனின் அறிவிப்பை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சசி தரூர் வரவேற்றுள்ளார். ஆனால் ஒரு பெண்ணாக இருந்து கங்கனா ரனாவத் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதாவது கணவருடன் செக்ஸ் வைத்துக்கொள்ள சம்பளம் தருவீர்களா?? நாங்கள் ஒரு அம்மா ஸ்தானத்தில் இருந்து குடும்பத்தை பார்த்துக் கொள்கிறோம். எங்கள் அன்பிற்கு நீங்கள் விலை நிர்ணயிக்க வேண்டாம். எங்கள் மாளிகையில் நாங்கள் இல்லத்தரசிகள் ஆக உள்ளோம்.உங்களை எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள். நாங்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பது அன்பு ஒன்று மட்டும்தான் என்றும் மூத்த நடிகராக இருந்து கொண்டு நீங்கள் இவ்வாறு பேசுவது தவறு என தெரிவித்துள்ளார் கங்கனா ரனாவத்.
0 Comments
No Comments Here ..