ஒக்ஸ்வர்ட் அஸ்ட்ரா- செனிகா கொவிட் 19 தடுப்பூசியை அவசர நிலைமைகளின் போது பயன்படுத்துவதற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார்
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையினால் இவ்வாறு குறித்த கொவிட் 19 தடுப்பூசியை பயன்ப்படுத்த அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் கொரோனாவின் அச்சம் அதிகரித்து வருகின்றமையினால், கொரோனாவுக்கு மருந்து தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையிலேயே ஒக்ஸ்வர்ட் அஸ்ட்ரா- செனிகா கொவிட் 19 தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதேவேளை கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை முதற்கட்ட நடவடிக்கைகளின் கீழ் 06 நாடுகளுக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments
No Comments Here ..