19,May 2024 (Sun)
  
CH
இந்திய செய்தி

பேரறிவாளன் விவகாரம் – 4 நாட்களில் முடிவு

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுவிக்கக் கோரும் விவகாரத்தில் தமிழக ஆளுநா் 3 – 4 நாள்களில் முடிவு எடுக்க உள்ளார் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷார் மேத்தா வியாழக்கிழமை தெரிவித்தார்

இதை அடுத்து, இந்த வழக்கு நான்கு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி 1991, மே 21 இல் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் பேரறிவாளன் உள்பட 7 போ் சுமார் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனா்.

இவா்களின் கருணை மனுவில் முடிவு எடுப்பதில் 11 ஆண்டுகளாக தாமதம் செய்ததாகக் கூறி, பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தண்டனையை 2014 இல் உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.

2018, செப்டம்பா் 9-இல் பேரறிவாளன் மற்றும் நளினி ஸ்ரீஹரன், இவரது கணவா் முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபா்ட் பயஸ் ஆகிய ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை கூடி தீா்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இந்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கு விவகாரத்தில் வெளிநாட்டுத் சதி ஏதும் உள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக மத்திய புலனாய்வுத் துறையால் அமைக்கப்பட்ட பல்நோக்கு ஒழுங்கு கண்காணிப்பு முகமையின் (எம்டிஎம்ஏ) விசாரணை முடிவடையும் வரை தனது ஆயுள் தண்டனையை நிறுத்திவைக்கக் உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நிலுவையில் உள்ளது.

இதனிடையே, 11.10,2020 இல் பேரறிவாளன் தரப்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கில் விடுதலை கோரி தமிழக ஆளுநருக்கு 2015 இல் அனுப்பிய மனு மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழக அரசு 2018 இல் அமைச்சரவையைக் கூட்டி தீா்மானம் நிறைவேற்றி அனுப்பிய கோப்பு மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகவே, நீதிமன்றமே இந்த விவகாரத்தில் முடிவு எடுத்து விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமா்வு, இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநா் இரு ஆண்டுகளாக ஏன் முடிவெடுக்கவில்லை என கேள்வி எழுப்பியிருந்தது.

உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரம் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்குத் தான் உள்ளது என்று மத்திய அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதற்கு மனுதாரா் தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், எஸ்.அப்துல் நஸீா், இந்து மல்ஹோத்ரா ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோகித் தரப்பில் மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷார் மேத்தாஆஜரானார்

அவா் நீதிபதிகள் அமா்விடம், இந்த விவகாரம் தொடா்பாக தமிழக அரசின் பரிந்துரை மீது தமிழக ஆளுநா் 3 – 4 நாட்களில் அரசமைப்புச்சட்ட விதிகளின்படி முடிவெடுக்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார் என்றார்

அதற்கு நீதிபதிகள் அமா்வு, இந்த விவகாரத்தை ஆளுநா் முடிவு செய் ய உள்ளதாக தெரிவித்திருப்பது நல்லது. இதற்கான முடிவு முன்னரே எடுக்கப்பட்டிருந்தால் நீதிமன்றத்தின் அதிக முயற்சிகளை சேமித்திருக்க முடியும் என்றது.அதன் பின்னா், மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணனிடம், இந்த ஏற்பாடு ஏற்கத்தக்கதுதானா என நீதிபதிகள் கேட்டனா்.

அதற்கு சங்கர நாராயணன், இந்த விவகாரத்தில் ஆளுநா் முடிவு எடுப்பது நல்லதுதான். ஆனால், அவரது முடிவு எங்களுக்கு ஏற்புடையதாக இல்லாதபட்சத்தில் வழக்கை நிலுவையில் வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்

இதன் பின்னா் நீதிபதிகள் அமா்வு சொலிசிட்டா் ஜெனரல் துஷார் மேத்தாவின் வாதத்தை பதிவு செய்துகொண்டு, இந்த விவகாரத்தை நான்கு வாரங்களுக்கு பிறகு விசாரிப்பதாக தெரிவித்தனா்.

மனுதாரா் தரப்பில் பிரபு ராமசுப்ரமணியன் உள்ளிட்டோரும், தமிழக அரசின் தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீநிவாசன், வழக்குரைஞா் யோகேஷ் கன்னா ஆகியோரும் ஆஜராகி இருந்தனா்.





பேரறிவாளன் விவகாரம் – 4 நாட்களில் முடிவு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு