29,Mar 2024 (Fri)
  
CH
வாழ்வியல்

பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது- தவறாமல் படிங்க..!

பெண்களுக்கு 20, 30, 40 வயதில் மாதவிடாயில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன

மாதவிடாய் குறித்து பொதுவான கருத்துக்களே உங்களுக்கு மாதவிடாய் குறித்த பிரச்சனைகளோ சந்தேகங்களோ இருந்தால், நீங்கள் அருகில் உள்ள டாக்டரை சந்தித்து அதற்கான தீர்வையோ ஆலோசனைகளையோ பெற்றுக்கொள்வதே சிறந்தது.

பெண்களுக்கு மாதவிடாய் காலம் என்பது அவர்கள் விரும்பத்தக்க வகையில் இருக்கும் நிகழ்வாக கருத முடியாது. இதைப்பற்றிய யூகத்தையும் நாம் எதிர்பார்த்தபடி அமைக்க முடியாது. இந்த மாதவிடாய் காலம், ஒரு மாதம் தாமதமாக துவங்கினால், மற்றொரு மாதமும் தாமதமாகவே இருக்கும் எனக் கணிக்க முடியாது. அடுத்த மாதத்தில் வெகுவிரைவாகவும் அது வரலாம். இந்த நிகழ்வானது ஒரு மாதத்தில் 4 நாட்கள் அளவில் நீடித்திருந்தால், அடுத்த மாதத்தில் அது 7 நாட்கள் வரை கூட நீடிக்கலாம். மாதவிடாய் காலத்தில், வலி இல்லாத நேரங்களில் ஏற்படும் தசைப்பிடிப்பு பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. ஆனால், அது இபுபுரொபென் ஆக சேகரம் ஆகும் போதுதான் அவர்கள் அசவுகரியத்தை உணர்கிறார்கள்.

மாதவிடாய் சுழற்சி

மாதவிடாய் சுழற்சியின் போது பெண்களுக்கு ஏற்படும் வலி போன்ற உணர்வுகளை யாராலும் சரியாக கணித்துவிட முடியாது. நம்மால் இந்த விசயத்தில் ஒன்றும் செய்ய முடியாது, அதனுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள் என்பதே இதற்கான ஒரே வழி.

உங்களுக்கு வயது அதிகரிக்க அதிகரிக்க உங்களின் மாதவிடாய் சுழற்சி சரிசெய்யப்பட்டு சீராகும். வயது தொடர்பான ஹார்மோன் மாற்றங்களும், கர்ப்பம் மற்றும் பெரிமெனோபாஸ் போன்ற அனுபவங்களுமே, பெண்களை, மாதவிடாய் காலத்திற்கு தங்களை பழக்கிக்கொள்ள பேருதவி புரிகின்றன. மாதவிடாய் சுழற்சி குறித்த புரிதல் நமக்கு முழுவதுமாக புரிய, குறிப்பிட்ட வயதை நாம் கடந்திருக்க வேண்டும். ஏனெனில், இத்தகைய அனுபவங்கள் சொல்லி தெரிவதில்லை. அவரவர்கள் அந்தந்த வயதுகளில் ஏற்படும் மாற்றங்களை உணர்ந்தே தெரிந்து கொள்ள வேண்டும்.

20வது வயது

டீன் ஏஜ் ஆண்டுகளில் உள்ள பெண்களில், மாதவிடாய் காலம் என்பது ஒரு தீய சக்தியுடன் போராடும் காலத்தை போன்றது ஆகும். (இந்த மோசமான காலகட்டத்தில், நடக்கும் எந்தவொரு காரியமும் உங்களுக்கு சந்தோஷத்தை அளிப்பதாக இருக்காது). இந்த ரணகளத்திலும் ஒரு குதூகலத்தை தரும் செய்தி என்னவென்றால், உங்கள் வாழ்க்கையின் இந்த காலகட்டத்தில் தான்,உங்களது வாழ்க்கை ஓட்டம் சீரானதாக மாறக்கூடும்.

ஒழுங்கற்ற மாதவிடாய்

இளம்பண்களுக்கு அண்டம் வெளியேறும் நிகழ்வு சீரான நேரத்தில் ஏன் நடப்பதில்லை என்பது குறித்து, Sex Rx-Hormones, Health, Your Best Sex Ever புத்தகங்களை எழுதிய ஆசிரியரும், அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தின் பிரபல மகப்பேறியல் மருத்துவருமான லாரென் ஸ்ட்ரெய்ச்சர் தெரிவித்துள்ளதாவது, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அண்டம் வெளியேறும் நிகழ்வு சீராக இல்லாவிட்டால், அவர்களின் இந்த குறிப்பிட்ட காலம் ஒழுங்கற்றதாகவே இருக்கும்.

மாதவிடாய் சுழற்சி, மாதாமாதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருந்து பின் சமம் ஆகும் நிலையில்,அவர்களது உடலில், மாதவிலக்கினால் வரும் தழும்புகள், மார்பக பகுதியில் மென்மையான உணர்வு போன்றவை நிகழ துவங்கும். மாதவிடாய் நிகழ்ச்சி மாதந்தோறும் சீராக இருக்காத பட்சத்தில், நாம் தேவையற்ற அசவுகரியங்களை சந்திக்க நேரலாம்.

கருத்தடை

பெண்களின் 20 வது வயதில் நிகழும் மாதவிடாய் சுழற்சி நிகழ்வானது, அவர்களது பிறப்பு கட்டுப்பாட்டு நிகழ்வுடன் தொடர்புடையதாக உள்ளது. இந்த நேரத்தில் பெண்கள், கருத்தடைக்கான ஹார்மோன் சிகிச்சையை எடுத்துக்கொள்ள துவங்குகின்றனர். ஏனெனில், இந்த நேரத்தில் அவருக்கு திருமணம் ஆகி கணவருடன் உடலுறவில் இணைந்திருப்பார்.

இந்த நேரத்தில் அவர்கள் தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைகள் பற்றிய நினைப்பைவிட, அவர்களுக்கு தங்களது வாழ்வாதாரம் குறித்த சிந்தனையே மேலோங்கி நிற்கும். அப்போது அவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்து, மாத்திரை, அவர்களது மாதவிடாய் சுழற்சி நிகழ்வில் மாற்றங்களை ஏற்படுத்திவிடும். சீரான இடைவெளிகளில், சரியான காலகட்டங்களில் மாதவிடாய் சுழற்சி தோன்றினால், அவர்களுக்கு அதிக வலி ஏற்படாத தன்மையும், அவர்களது உடலில் சில தழும்புகள் மட்டுமே தோன்றி, அவர்களும் இந்த காலத்தையும் மிகவும் மகிழ்ச்சியானதாக கழிப்பர்.

கருத்தடைக்கான ஹார்மோன் அல்லது மருந்து, மாத்திரை எடுத்துக்கொள்பவர்களுக்கு, உங்களுக்கு மாதவிடாய் வருவதை தள்ளிப்போடும். குழந்தை பிறப்பு கட்டுப்பாட்டுக்காக உட்கொள்ளும் மருந்துகள், அண்டம் வெளியேறும் நிகழ்வை தடுக்கும். இந்த நிகழ்வு நிகழாவிட்டால், கருப்பையில் எவ்வித மாற்றமும் நிகழாது, அதன் காரணமாக, ரத்தப்போக்கு போன்ற துயர சம்பவங்கள் நிகழாது.

30வது வயது

இந்த காலகட்டத்தில், பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி காலம் கணிக்கப்பட்ட கால அளவிலும், நிலைத்தன்மை கொண்டதாகவும் இருக்கும் என்று மருத்துவர் ஸ்டிரெய்ச்சர் குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்கு இந்த காலகட்டத்தில், அதிக உதிரப்போக்கு அல்லது வழக்கத்திற்கு மாறாக அதீத வலி இருப்பின், அது பெரிய பிரச்சினைக்கு இட்டுச்சென்று விடும். இந்த நிலைக்கு பைப்ராய்ட்ஸ் என்று பெயர்.

இதேநிலை தொடர்ந்து நீடித்தால் எண்டோமெட்ரியோசிஸ் நிலைக்கு தள்ளிவிடும். இந்த நேரத்தில் கருப்பை அகப்படலத்தில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு சில நேரங்களில் உதிரப்போக்கு கட்டுங்கடங்காத நிலைக்கு சென்று மரணமும் நிகழ வாய்ப்பு உண்டு.

பெண்களுக்கு இந்த 30வது வயதில் குழந்தைகள் பிறந்து இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்காத பட்சத்தில், பிரசவத்திற்கு பிறகு ஆறு வார காலம் வரை, உங்களுக்கு மாதவிடாய் சுழற்சி நிகழாது என்று மற்றொரு மருத்துவரான ஷெரில் ரோஸ் தெரிவித்துள்ளார்.

உங்களுக்கு மாதவிடாய் சுழற்சி மீண்டும் வருவதும், அது எப்போது வர வேண்டும் என்பதும் உங்கள் கைகளிலேயே உள்ளது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம், இந்த மாதவிடாய் சுழற்சி முறையை நாம் நம் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

குழந்தை பிறப்பு

குழந்தை பிறப்பின் மூலம், மாதவிடாய் சுழற்சி காலத்தை ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் தள்ளிப் போடலாம். பிரசவத்திற்கு பிறகு, மாதவிடாயின் காரணமாக உடலில் ஏற்பட்ட தழும்புகள் மாயமாவதாக சில பெண்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரசவ காலத்தில் பெண்களின் கர்ப்பப்பை வாய் திறப்பின் அளவு பெரியதாக மாறுவதால், உதிரப்போக்கு எவ்வித சிரமமுமின்றி வெளியேறுவதோடு மட்டுமல்லாது, கர்ப்பப்பை பகுதியில் தேவையில்லாத சுருக்கங்கள் ஏற்படுவதிலிருந்தும் காக்கிறது.

40வது வயது

பெண்கள் இந்த வயதில் இருந்து தான் தங்கள் வாழ்வின் உண்மையான சந்தோஷத்தை அனுபவிக்க துவங்குகிறார்கள். ஏனெனில், இந்த காலகட்டத்தில் தான் பெரிமெனோபாஸ்க்கு உதவும் ஹார்மோன்களில் ஏற்ற இறக்கங்கள் நிகழ்கின்றன. இது மாதவிடாய் சுழற்சியின் இறுதிப்பக்கத்தை குறிக்கிறது. இந்த காலகட்டத்தில் இருந்து அதிகபட்சமாக 8 முதல் 10 ஆண்டுகள் (அதாவது கிட்டத்தட்ட 50 வயது) நெருங்கும் போது, அவர்களது உடல், மாதவிடாய் சுழற்சி காலத்தை நாம் நெருங்கிவிட்டோம் என்று அர்த்தம்.

​ஹார்மோன் மாற்றங்கள்

பெண்களில் உடலில் நிகழும் இயல்பான ஹார்மோன் மாற்றங்கள், அண்டம் வெளியேறும் நிகழ்வை சீரற்றதாக இருக்க உதவுகின்றன. அதேபோல், எஸ்ட்ரோஜன் ஹார்மோன் நிகழ்வில் ஏற்படும் ஏற்றத்தாழ்வும், மாதவிடாய் சுழற்சியில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அதிக உதிரப்போக்கு, அதிக அளவிலான தழும்புகள் போன்றவை இந்த காலகட்டத்தில் நிகழ இது காரணமாக அமைகின்றன. அண்டம் வெளியேறும் நிகழ்வு ஒழுங்கற்றதாக இருந்தாலும், நீங்கள் கர்ப்பம் தரிக்க வாய்ப்பு உண்டு. ஒரு பெண் நினைத்தால், தனது மாதவிடாய் சுழற்சி காலத்தை ஒரு ஆண்டுகள் வரை தள்ளிப்போடலாம்.

தைராய்டு பிரச்சினை

பெண்களின் வயதுக்கும், அவர்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சிக்கும் அவர்களின் ஓட்டுமொத்த உடல்நலத்திற்கு காரணமாக அமைகின்றன. இதில் வழக்கத்திற்கு மாறாக ஏதேனும் அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக அதற்குரிய மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி, அதிதீவிர உதிரப்போக்கு போன்றவைகள், தைராய்டு பிரச்சினைகள் உள்ளிட்ட குறைபாடுகள் ஏற்பட வழிவகுத்து விடும் என்பதை மறந்துவிட வேண்டாம்.




பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது- தவறாமல் படிங்க..!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு