28,Mar 2024 (Thu)
  
CH
கவிதைகள்

உள்ளத்தின் ஓசை

வானினும் பெரிது உணர்க - நமை

ஈன்றெடுத்தத் தாயெனும் உறவு !

கடலினும் ஆழமது அறிக - ஆருயிர்

அன்னையின் ஈடில்லா அன்பு !

உலகினும் விரிந்துப் பரந்தது - கடமை

உணர்வுள்ள தந்தையின் உள்ளம் !

விண்ணினும் உயரம் பூமியில் - உண்மை

நட்புகளின் நேசமிகு நெஞ்சம் !

விஷத்தினும் கொடியது பூமியில் -தெரிந்தும்

அறிந்தோர் செய்திடும் துரோகம் !

கொலையினும் மாபெரும் குற்றம் - ஒருவர்

செய்நன்றி மறத்தல் வாழ்வில் !

கொள்கை இதுவென கொள்க - என்றும்

மனிதம் புனிதமென மண்ணில் !

பகுத்து அறிதலே வழிமுறை - எதிலும்

வகுத்து வாழ்வதே நடைமுறை !





உள்ளத்தின் ஓசை

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு