02,May 2024 (Thu)
  
CH
ஆன்மிகம்

வீடுகளில் சிறப்பு தொழுகை நடத்திய முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகை:

கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவரவர் வீடுகளிலேயே சிறப்பு தொழுகையை இஸ்லாமியர்கள் நடத்தினார்கள்.

முஸ்லிம்களின் 5 முக்கிய கடமைகளில் ஒன்று நோன்பு. ரமலான் மாதம் முழுவதும் இஸ்லாமிய பெரு மக்கள் நோன்பு இருப்பார்கள். ரமலான் மாதத்தை அடுத்து வரும் ஷவ்வால் மாத பிறை தெரிந்ததும், ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி, ஷவ்வால் மாத பிறை தமிழகத்தில் தென்படவில்லை. ஆனாலும் ரம்ஜான் பண்டிகை நேற்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாகுதீன் முகம்மது அயூப் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. கோவையிலும்அனைத்து இடங்களிலும் நேற்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. குறிப்பாக உக்கடம், ஆத்துப்பாலம், குனியமுத்தூர், கோவை புதூர் உள்பட பல்வேறு பகுதிகளில் ரம்ஜான் பண்டிகையை இஸ்லாமியர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.

ஆனால் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.

இதனால் அவரவர் வீடுகளிலேயே சிறப்பு தொழுகையை இஸ்லாமியர்கள் நடத்தினார்கள். பெரும்பாலும் வீடுகளின் மொட்டை மாடியிலேயே தொழுகை நடத்தப்பட்டது.

தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை பறிமாறி கொண்டனர். கொரோனா தொற்று காரணமாக எளிமையாக வீடுகளில் இந்த பண்டிகையை கொண்டாடினர்.

மேலும் பலர் கொரோனா பெருந்தொற்று குறைந்து மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்து கொண்டனர்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





வீடுகளில் சிறப்பு தொழுகை நடத்திய முஸ்லிம்கள் ரம்ஜான் பண்டிகை:

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு