19,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினரால் கிளிநொச்சி மக்களுக்கு உலர் உணவு பொதிகள்

பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் உயர் ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு) முகமது சாத் கத்தாக் அவர்களுக்கு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க விடுத்த அழைப்பிற்கமைய கிளிநொச்சி ஏழை மக்களுக்கு செவ்வாய்க்கிழமை (29) 150 உலர் உணவு பொதிகளை வழங்கினார்.

கிளிநொச்சி பிரதேசத்தில் வறுமை கோட்டின் கீ்ழ் வாழும் பொது மக்களுக்கு உதவும் நிமித்தம் 57 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயவர்தன அவர்களின் ஏற்பாட்டில் தலா 3000 / = மதிப்புள்ள உலர் உணவு பொதிகள் படையினரால் ‘நெலும் பியச’ மண்டபத்தில் வைத்து விநியோகிக்கப்பட்டன. இப் பொதிகளில் அரிசி, பருப்பு, தானியங்கள், பால்மா, மசாலா ஆகியவை காணப்பட்டன.

சம்பிரதாய பூர்வமாக 30 பொதிகளை அன்றைய பிரதம அதிதியான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரால் விநியோகிக்கப்பட்டன.


உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினரால் கிளிநொச்சி மக்களுக்கு உலர் உணவு பொதிகள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு