28,Mar 2024 (Thu)
  
CH
சினிமா

நடிகை சுருதிஹாசன் வருத்தம் எனக்கு ஒன்னுமே தெரியாது

நடிகையும் பாடகருமான சுருதிஹாசன் சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார் இந்நிலையில் அவர் மூத்த நடிகர்களுடன் நடிப்பதை சிலர் விமர்சனம் செய்ததற்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சுருதிஹாசன். இவர் பாடகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது அவர் நடிகர் சிரஞ்சீவி, நடிகர் பாலகிருஷ்ணா போன்ற பல மூத்த நடிகர்களுடனும் இணைந்து நடிக்கிறார். இந்நிலையில் அவர் மூத்த நடிகர்களுடன் நடிப்பதை சிலர் விமர்சனம் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு சுருதிஹாசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சுருதிஹாசன் கூறியதாவது, “நானும் என் நண்பர் சந்தனுவும் காதலை வெளிப்படுத்திக் கொண்டோம். அதை இன்னொரு கட்டத்திற்கு கொண்டு செல்லும் எண்ணம் இப்போது இல்லை. காதல் திருமணம் போன்ற விஷயங்களைப் பேசுவதில் எனக்கு இஷ்டம் இல்லை. சினிமாவிற்கு வந்த புதிதில் நடிப்பு, சினிமா பற்றி ஒன்றுமே தெரியவில்லை. அப்போது நான் இசைத்துறையில் மட்டுமே இருந்தேன். எதிர்பாராமல் நடிகையாக மாற வேண்டியிருந்தது. நானும் இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் இருக்கிறேன் என்றால் ஆச்சரியம்தான். நடிகர் சிரஞ்சீவி, நடிகர் பாலகிருஷ்ணா போன்ற மூத்த கதாநாயகர்களுடன் சேர்ந்து நடிக்க ஒப்புக்கொண்டதை சிலர் விமர்சிக்கின்றனர். கதை, கதாபாத்திரம் பிடித்தால் மூத்த நடிகர்களுடன் இணைந்து நடிப்பேன். நான் சினிமாவில் புதிய முயற்சிகள் செய்யும் ஒவ்வொரு முறையும் எத்தனையோ சந்தேகங்களை வெளிப்படுத்தி என்னை பயமுறுத்தினார்கள். நான் பயப்படாமல் எதை செய்ய வேண்டுமோ அதையே செய்தேன். பாலகிருஷ்ணா படத்தில் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்'' என்றார்.

உடனுக்குடன் செய்திகள், உலகதகவல்கள், ஆன்மீகம், மருத்துவம், ஆரோக்கியம், சினிமா, கிசுகிசு செய்திகள் , விளையாட்டு, தொழில்நுட்பம், நிகழ்வுகள் தெரிந்து கொள்ள Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





நடிகை சுருதிஹாசன் வருத்தம் எனக்கு ஒன்னுமே தெரியாது

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு