பெண்களுக்கு பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக பேச மீடூ ஹாஷ்டாக்கை பாடகி சின்மயி கோலிவுட்டில் பயன்படுத்தினார்
பாலியல் சீண்டல்கள், பொதுவெளியில் நல்லவர் போல வேடமிட்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை தருபவர்களை வெளிக்கொண்டு வரும் தளமாக இதனை நடிகைகள், பெண்கள் என முன்வந்து பதிவிட்டு வந்தனர்
தற்போது இந்தி நடிகை ரத்தன் ராஜ்புத் தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து பேசியுள்ளார்.
பல இந்தி சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்து வருபவர் இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாபாரதம் தொடரில் அம்பையாக தனது நடிப்பின் மூலம் மிரட்டியிருப்பார்.
தனக்கு நேர்த பாலியல் தொல்லை குறித்து அவர் கூறுகையியல் நடிகை தேர்வு நடப்பதாக சொல்லப்பட்ட இடத்திற்கு என் ஆண் நண்பருடன் சென்றேன் அங்கே எனக்கு ஒரு சிட்சுவேஷன் கொடுத்து நடித்து காட்ட சொன்னார்கள், நான் நடித்து காட்டியதை பார்த்து மிகவும் பாராட்டினார்கள்
அதை தொடர்ந்து எனக்கு ஜூஸ் ஒன்றை குடிக்க கொடுத்தார்கள், அதை குடித்த போது அதில் போதை பொருள் கலந்திருப்பதை என்னால் உணர முடிந்தது உடனே அதை அப்படியே வைத்து விட்டேன்.
பின் அருகில் இருந்த அறைக்கு அழைத்து சென்றார்கள் அங்கு அறை முழுவதும் உடைகள் இருந்தது, ஒரு பெண் மது போதையில் ஆடையின்றி இருப்பதை பார்த்து அதிர்ந்தேன்,
உள்ளே இருந்த நபர் என்னை பார்த்து நண்பருடன் உள்ளே ஏன் வந்தாய் என்று கத்தினார், அங்கு நடப்பதை உணர்த்த நான் அங்கிருந்து எனது நபரை அழைத்துக்கொண்டு தப்பியோடினேன்.இந்தி நடிகை ரத்தன் ராஜ்புத் பகிரிந்த இந்த அதிர்ச்சி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 Comments
No Comments Here ..