இந்தியாவில் எதிர்வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் உலகக் கிண்ண கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி தொடர் நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடர் நெருங்கி வரும் நிலையில் அனைத்து அணிகளும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி தொடருக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில், உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் வெற்றிக் கிண்ணத்தை பாரிசில் அறிமுகம் செய்து வைத்தார் நடிகை மீனா.
இதன் மூலம் இந்த கிண்ணத்தை அறிமுகம் செய்யும் முதல் இந்திய நடிகை என்ற பெருமையை நடிகை மீனா பெற்றார்.
தனது இன்ஸ்டாகிராமில் அந்த புகைப்படங்களை பகிர்ந்து நடிகை மீனா விரைவில் நடைபெற உள்ள ஆண்களுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் வெற்றிக் கிண்ணத்தை அறிமுகப்படுத்தும் பாக்கியம் எனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார்.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் வெற்றிக் கிண்ணத்துடன் நடிகை மீனா நிற்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
0 Comments
No Comments Here ..