02,May 2024 (Thu)
  
CH
இந்திய செய்தி

மெட்ரோ ரயில்களில் கட்டியணைத்து முத்தமிடும் காதலர்கள்-முகம் சுளிக்கும் பயணிகள்

அன்மை காலங்களாக டெல்லி மெட்ரோ ரயில்களில் காதலர்கள் முத்தமிடுவது, கட்டியணைத்து கொள்வது போன்ற வீடியோக்கள் வெளியாகி வைரலானது. இதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கலாச்சாரமும், பண்பாடும் மிகுந்த இந்தியாவில் காதல் ஜோடிகள் இவ்வாறு நடந்துக்கொள்வது அநாகரிகமானது என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். தற்போது அதேபோன்று மேலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. மீண்டும் டெல்லி மெட்ரோ ரயிலில் காதலர்கள் முத்தமிடும் வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


ஆனந்த் விஹார் பகுதியில் ஓடும் ரயிலில் அநாகரீக சம்பவம் அரங்கேறியுள்ளது. இதை பயணி ஒருவர் வீடியோ எடுத்து X தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் என பெரும்பாலான பொதுமக்கள் பயன்படுத்தும் மெட்ரோ ரயிலில் அநாகரீகமாக நடந்து கொண்ட இந்த இளம் ஜோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.


டெல்லி மெட்ரோ ரயில்களில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறுவது இது முதல் முறையல்ல. கடந்த காலங்களிலும் இத்தகைய முகம் சுளிக்க வைக்கும் சம்பவங்கள் பலமுறை நடைபெற்றுள்ளன. இதையடுத்து மெட்ரோ ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக மெட்ரோ ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பாதுகாவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட தொடங்கினர். ஆனாலும் முகம் சுளிக்க வைக்கும் சம்பவங்கள் குறைந்தபாடில்லை.

எனவே இனி இத்தகைய செயல்களில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாம் உறுதியாக நம்பலாம். எனென்றால் டெல்லி மெட்ரோ ரயில் கழகத்தின் சட்ட திட்டங்களின் படி, பிற பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்பவர்கள் மீதும், அநாகரீகமாக நடந்து கொள்பவர்கள் மீதும் 59-ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் வலியுறுத்துகின்றனர்




மெட்ரோ ரயில்களில் கட்டியணைத்து முத்தமிடும் காதலர்கள்-முகம் சுளிக்கும் பயணிகள்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு