25,Apr 2024 (Thu)
  
CH
ஜரோப்பா

சீனாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி: பிரான்ஸ்

கொரோனா வைரஸ் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சீனாவிலிருந்து அழைத்துவரப்பட்டவர்களில் ஒருவருக்கு, கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

இதனை உறுதிப்படுத்தியுள்ள சுகாதார அமைச்சர் அக்னஸ் புஸின், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள ஏழாவது நபர் இவராகும். தாக்கத்துக்கு இலக்கான நபர் குறித்த மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை.

கொரோனா வைரஸ் காரணமாக வுஹான் நகரில் வசிக்கும் 215 பிரான்ஸ் குடியுரிமைக்காரர்கள், விஷேட விமானம் மூலம் போச்சஸ் டூ ரொன் நகரில் உள்ள இஸ்ட்ரெஸ் இராணுவ தளத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் அடுத்த 14 நாட்களுக்கு அங்கேயே தங்கவைப்பட்ட உள்ளனர். அதன் பின்னரே அவர்கள் தங்களது வீடுகளுக்கு அனுப்பப்பட உள்ளனர்.

இந்த நிலையில் இவர்களுக்கு கொரோனா வைரஸ் மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டன. இதில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.





சீனாவிலிருந்து நாடு திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி: பிரான்ஸ்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு